Posted in

அண்ணன் என்று நம்பிய மகள்! தாய் செய்த மோசமான செயல்!

அண்ணன் என்று நம்பிய மகள், தாய் செய்த மோசமான செயளை பார்த்து அதிர்ந்த சம்பவம் இனையத்தில் வெளியாகி செம வைரலாக பிரவவி வருகிறது.

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடந்த சம்பவம் முழு மாநிலத்தையும் உலுக்கி எடுத்துள்ளது. குடும்பத்திற்காக துபாயில் உழைத்து வரும் கணவரை ஏமாற்றி, உறவினரின் மகன் என்று நம்பி வீட்டுக்கு அனுமதித்த இளைஞருடன் கள்ளக்காதல் வைத்துக்கொண்ட 45 வயது பெண் ஒருவர், நான்கு மாத கர்ப்பிணியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர உண்மையை கண்டுபிடித்தது அவரது 16 வயது மகள் தான்! ரமேஷ் பட்நாயக் (45) என்ற தொழிலாளி, குடும்பத்தை காப்பாற்ற துபாயில் கடுமையாக உழைத்து வருகிறார். அவரது மனைவி உமா பட்நாயக் (45) மற்றும் மகள் பிரியங்கா (16) ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார் உமா.

கணவர் வெளிநாட்டில் இருப்பதால், வீட்டு வேலைகளுக்கு உதவி செய்யுமாறு உறவினர் ஒருவரிடம் கேட்டுக்கொண்டார் ரமேஷ். அதன்படி, உறவினரின் மகனான சுரஜ் பட்நாயக் (25) என்ற இளைஞர் அடிக்கடி வீட்டுக்கு வந்து மளிகை பொருட்கள் வாங்கிக்கொடுப்பது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என உதவி செய்து வந்தார்.

தனிமையின் கொடுமையில் சிக்கிய உமாவுக்கு சுரஜின் தோழமை ஆறுதலாக அமைந்தது. ஒருகட்டத்தில் உறவினர் என்றும் பாராமல் எல்லை மீறிய உறவில் ஈடுபட்டனர் இருவரும். மகள் பிரியங்கா பள்ளிக்கு சென்ற பிறகு வீட்டில் தனிமையில் உல்லாசமாக இருந்தனர். இரவுகளில் சுரஜ் வீட்டில் தங்க ஆரம்பித்தார்.

பிரியங்கா உறங்கிய பிறகு தாயும் இளைஞரும் ரகசியமாக உல்லாசத்தில் ஈடுபட்டனர். ஒரு இரவு,முனகல் சத்தம் கேட்டுதிடீரென கண் விழித்த பிரியங்கா, தனது அண்ணன் என்று நம்பிய சுரஜும், தனுடைய தாயும் உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ந்து போனாள். உயிருக்கு ஆபத்து என உணர்ந்த அந்த பள்ளி மாணவி, ஒன்றும் தெரியாதது போல் மீண்டும் உறங்கினாள்.

அடுத்த நாள் பள்ளியில் தனக்கு நெருக்கமான ஆசிரியையிடம் இந்த விஷயத்தை கூறி கண்ணீர் வடித்த பிரியங்காவிற்கு அந்த ஆசிரியை ஆறுதல் கூறியது மட்டுமில்லாமல், வேறு யாரிடமும் இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம்.. என்னிடம் சொன்னதோடு விட்டுவிடு.. நாம பாத்துக்கலாம்.. ஒன்னும் கவலைப்படாத.. முதலில் இந்த விஷயத்தை உங்க அப்பாகிட்ட சொல்லுவோம் என்று கூறி தன்னுடைய கைப்பேசியில் இருந்து தந்தை ரமேஷுக்கு போன் செய்து கொடுத்தார் ஆசிரியை ரேகா.

தந்தையிடம், அனைத்தையும் உருக்கமாக தெரிவித்தாள். “அப்பா, அம்மாவும் சுராஜ் அண்ணனும்.. செய்வது துரோகம்பா.. என்னால இங்க இருக்க முடியலப்பா.. பயமா இருக்குப்பா..!” என்று அழுது கதறினாள் பிரியங்கா. துபாயில் இருந்த ரமேஷ் மனம் உடைந்து போனார்.

இரண்டு மாதங்கள் கழித்து தான் இந்தியா வர முடியும் என்ற நிலையில், கையறு நிலையில் தவித்தார். நீ எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேணாம்மா.. அங்க ஏதாவது ஒண்ணுன்னா.. என்னால ஒண்ணுமே பண்ண முடியாது.. நீ எதை பத்தியும் கவலைப்படாம வழக்கம் போல இருமா.. ரெண்டே மாசத்துல அப்பா வந்துடுறேன்.. டெய்லி டீச்சர் போன்ல இருந்து எனக்கு போன் பண்ணு.. பயப்படாதமா.. என்று மகளுக்கு நம்பிக்கை கொடுத்த ரமேஷ், ஆசிரியை ரேகாவுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.

உடனே சுரஜுக்கு போன் செய்து, விஷயம் தெரியாதது போல் நடித்து, “இனி வீட்டு பக்கம் வராதே, அக்கம் பக்கத்தினர் ஒரு மாதிரி பேசுகிறார்கள்.. சரியா படல..” என்று எச்சரித்தார். உஷாரான சுரஜ், “சரி அண்ணா, நான் இனி வரமாட்டேன்” என்று பவ்யமாக பதிலளித்தான். ஆனால் உமாவின் உடலுறவு வெறி அடங்கவில்லை, அவள் நிறுத்தவில்லை.

சுரஜுடன் சினிமா, லாட்ஜ் என வெளியிடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தாள். வீட்டுக்கடன், நகைக்கடன் என 97 லட்சம் ரூபாய் கடன் இருக்கும் நிலையில், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், கணவர் அனுப்பிய பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, தன்னுடைய ஆசை நாயகனுடன் உல்லாச பறவையாக சுற்றி திரிந்தார் உமா, மேலும், சுரஜுக்கு புல்லட் பைக் ஒன்று வாங்கிக்கொடுத்தாள். 5 பவுன் தங்க சங்கிலியும் பரிசளித்தாள்.

கடந்த இரண்டு வருடத்தில், 60 லட்சம் பணத்தை வேறு அனுப்பியிருக்கோம். பணமெல்லாம் என்ன ஆனதோ.. என்று பயந்து போன ரமேஷ் சந்தேகப்பட்டு பணம் அனுப்பாமல் இருக்க, “தொழில்நுட்ப பிரச்சனை, அடுத்த மாதம் நேரில் வருகிறேன்” என்று சமாளித்தார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பிய ரமேஷுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி! உமா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தாள். வாட்ஸாப் செய்திகளை சோதனை செய்த போது, மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு சுரஜுடன் திருமணம் செய்து, புதிதாக Purified Water தொழில் தொடங்கி வாழ திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. கடந்த சில மாதங்களில் அனுப்பிய 60 லட்சம் ரூபாயில் 10 லட்சத்தை கண்ணு முன்னு தெரியாமல் செலவழித்திருந்தாள் உமா. 50 லட்சம் ரூபாய் பணம் மட்டும் வங்கியில் இருந்தது. நிம்மதி பெருமூச்சு விட்டார் ரமேஷ்.

உடனடியாக போலீசில் புகார் அளித்தார் ரமேஷ். பயந்து போன உமா, நெஞ்சு வலி என்று கூறி மருத்துவமனையில் சேர்ந்தாள். விசாரணையில் அனைத்தும் உறுதியானது. சுரஜிடம் இருந்து புல்லட் பைக் மற்றும் தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டன. மனைவி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில், விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார் ரமேஷ்.

தனது மகன் வயதுடைய இளைஞருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு, குடும்பத்தை துரோகம் செய்த உமாவின் செயல், ரமேஷின் மனதிலும், 16 வயது பிரியங்காவின் இதயத்திலும் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. “எங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை அழித்துவிட்டாள் அம்மா” என்று கண்ணீருடன் கூறுகிறாள் பிரியங்கா. இந்த சம்பவம் ஒடிசா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதல் எப்படி ஒரு குடும்பத்தை சீரழிக்கும் என்பதற்கு இது உதாரணம்.

அன்று இரவு மகள் பிரியங்காவுக்கு தூக்கம் கலையாமல் இருந்திருந்தால் அடுத்த சில மாதங்களில் ரமேஷின் மொத்த உழைப்பும் விணாகியிருக்கும். 97 லட்சம் ரூபாய் கடன் கழுத்தை நெரித்திருக்கும். அந்த நேரத்தில், தந்தை ரமேஷின் நிலையும், மகள் பிரியங்காவின் நிலையும் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

குடும்பத்தின் கடனை அடைக்க வேகாத வெயிலில் ரத்தத்தை வியர்வையாக சிந்தி பாடுபட்ட மனுஷன், அற்ப உடல் தேவைக்காக உமா செய்த கண்றாவியால் உடைந்து போயுள்ளான். சரியான நேரத்தில், கடவுள் மனைவி உமாவின் உண்மை முகத்தை அப்பா, மகள் இருவருக்கும் படம் போட்டு காட்டியுள்ளார்.

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading