Posted in

கள்ளக்காதல் விவகாரம்! கணவனை முடிக்க நினைத்த மனைவி கைது!

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை முடிக்க நினைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயபுரா (கர்நாடகா): கள்ளக்காதலுக்காக சொந்த கணவனையே கொலை செய்ய திட்டமிட்ட மனைவியின் சதி தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், அது வெட்ட வெளிச்சமாக வெளியே வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி நகரின் அக்கமஹாதேவி பகுதியில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம், திருமண உறவின் எல்லையைத் தாண்டிய துரோகத்தின் கொடூர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது.கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நள்ளிரவில் நடந்த இந்த கொலை முயற்சியில், 29 வயதான சுனந்தா பூஜாரி என்ற பெண், வாட்ட சாட்டமான தோற்றம், எடுப்பான அழகுகள், பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக வசீகரம் என அழகு ராணி போல தோற்றம். ஆனால், உள்ளத்தில் அவள் ஒரு அசிங்க ராணியாக வளர்ந்தார்.

தனது கள்ளக்காதலன் குட்டப்பா கட்டகேரியுடன் சேர்ந்து, தனது கணவர் பீரப்பா பூஜாரியை (36) கொல்ல முயன்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக பீரப்பா உயிர் தப்பிய நிலையில், போலீசார் சுனந்தாவை கைது செய்துள்ளனர். குட்டப்பா தலைமறைவாகி, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு சுனந்தாவையே குற்றம் சாட்டியுள்ளார்.

கள்ள உறவும், கொலைத் திட்டமும்!

விவசாயியான பீரப்பா, மனைவி சுனந்தா மற்றும் இரு குழந்தைகளுடன் இண்டி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக சுனந்தா – குட்டப்பா இடையே தகாத உறவு நீடித்து வந்ததாக தெரியவந்துள்ளது. அவர்களது நிலங்கள் அருகருகே இருந்ததால் பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இது திருமணம் தாண்டிய உறவாக மாறியது, விவசாய நிலத்தில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் பண்ணை கள்ளத்தனமாக வீட்டுக்குள் விவசாயம் பார்த்து வந்துள்ளனர்.

தன்னுடைய உடலுறவு வெறியை அடக்க முடியாமல், வறண்டு போயிருந்த சுனந்தாவின் காய்ந்த நிலத்தில் நீர் பாய்ச்சி விவாசாயம் செய்து வந்திருக்கிறார் குட்டப்பா.ஒரு கட்டத்தில், இவர்களின் விவசாய விவகாரம், கணவர் பீரப்பாவுக்கு தெரிய வந்துள்ளது. உடனே, இந்த உறவை அறிந்து எச்சரித்து சுனந்தா விவாகரத்து செய்யும் நிலைக்கு சென்றுள்ளார்.

ஆனால், குடும்ப பெருசுகள், உடலுறவு மீதான சுனந்தாவின் வெறி பற்றி தெரியாமல் பேச்சு வார்த்தை நடத்தி இருவரையும் மீண்டும் சேர்த்து வைத்தனர். ஆனால், சுனந்தா தன்னுடைய கள்ள விவசாயத்தை கைவிடவில்லை.

தன்னுடைய வாழ்க்கையில் இருந்து, கணவனை அகற்றிவிட்டு காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில், சுனந்தா கொலைத் திட்டம் தீட்டினார். செப்டம்பர் 1 ஆம் தேதி நள்ளிரவில் குட்டப்பாவையும் மற்றொரு நபரையும் வீட்டுக்கு வரவழைத்தார்.

நள்ளிரவில் நடந்த கொடூரம்!

பீரப்பா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, கையில் கத்தியுடன் வந்த சுனந்தா கணவரின் ஆணு*றுப்பை பிடித்து அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால், திடீரென கண் விழித்து பார்த்த பீரப்பா அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். சுனந்தாவை ஒரே தள்ளு தள்ளி கீழே வீழ்த்தினார்.

உடனே, குட்டப்பா அவரது மார்பில் ஏறி அமர்ந்து கழுத்தை நெரித்தார். மற்றொருவர் கால்களைப் பிடித்து அடக்கி, ஆணுறுப்பை கைகளால் தாக்கி நிலைகுலையச் செய்ய முயன்றார். சுனந்தா அருகில் நின்று, “விட்டு.. விடாதே… கொன்றுவிடு!” என்று கட்டளையிட்டதாக பீரப்பா கூறியுள்ளார்.மரண பயத்தில், உயிருக்கு போராடிய பீரப்பா, அருகிலிருந்த குளிர்சாதனப் பெட்டியை ஓங்கி உதைத்தார். அதில் இருந்த கேஸ் டேங் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சத்தம் கேட்டு 8 வயது மகன் எழுந்தான்.

அக்கம்பக்கத்தினரும் வீட்டுக்கு முன்பு ஓடிவந்தனர். இதைக் கண்டு பயந்த குட்டப்பாவும் அவரது உதவியாளரும் அங்கிருந்து தப்பி ஓடினர். கடைசி நிமிடத்தில் பீரப்பாவின் உயிர் தப்பியது!

சம்பவத்திற்குப் பிறகு சுனந்தா நடிக்கத் தொடங்கினார். “ஏன் இப்படி கத்துகிறீர்கள்? எதுவும் நடக்கவில்லையே!.. எதாச்சும் கனவு கண்டீங்களா..?” என்று கேட்டு, தான் அப்பாவியைப் போல நடித்தார். ஆனால் பீரப்பா ஒரு நிமிடம் குழம்பி போனார், கனவு என்றால் காலில் கழுத்தில் காயம் எப்படி வந்தது..? அனைத்தையும் பார்த்துவிட்டார்.

காதலனின் வீடியோ ஒப்புதல் – பழியைத் திருப்பி அடித்தார்!

கொலை முயற்சி தோல்வியடைந்ததும் குட்டப்பா தலைமறைவானார். பின்னர் அவர் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில், “சுனந்தாவும் நானும் 2.5 ஆண்டுகளாக உறவில் இருக்கிறோம். நிலங்கள் அருகே இருந்ததால் பழக்கம் ஏற்பட்டது. இந்தக் கொலைத் திட்டம் அவளதே! இப்போது என் மீது பழி போட முயல்கிறாள். 

நான் போலீசில் முழு உண்மையைச் சொன்னாலும், சட்டம் பெண்களுக்கு சாதகமாக இருப்பதால் நம்ப மாட்டார்கள். எனவே…” என்று கூறி வீடியோவை வெளியிட்டார். அடுத்த நாள், காட்டுப்பகுதி மரக்கிளை ஒன்றில் குட்டப்பா சடலமாக லுங்கியில் தொங்கினார்.

போலீசார் நடவடிக்கை!

பீரப்பாவின் புகாரின் பேரில் இண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து சுனந்தாவை கைது செய்தனர். குட்டப்பாவைத் தேடி வருகின்றனர். விஜயபுரா எஸ்பி லக்ஷ்மண் நிம்பர்கி நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடக்கிறது.இந்தச் சம்பவம் உள்ளூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருமண உறவில் நம்பிக்கைத் துரோகம் எந்த அளவுக்கு கொடூரத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு உதாரணம். சுனந்தாவின் “பலே திட்டம்” தோல்வியடைந்தாலும், அது ஒரு குடும்பத்தை சிதைத்துவிட்டது.இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading