தமிழ் சினிமாவில் 40 வயதில் ஆனாலும் திருமணம் செய்யாமல் இருக்கும் டாப் 10 நடிகைகள்!!

தமிழ் சினிமாவில் பட்டைய கிளப்பி வரும் டாப் 10 நடிகைகள் 40 வயதானாலும் திருமணம் செய்யாமல் தீர்க்க காரணம் இதோ.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகைகளாக இருந்த சிலர் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தும் சொந்த வாழ்க்கையில் திருமணமே வேண்டாம் என முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள். அது யார் யார்? என்ன காரணத்திற்காக அவர்கள் திருமணத்தை வேண்டாம் என ஒதுக்குகிறார்கள் என இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ், தெலுங்கு , இந்தி என பல மொழி படங்களில் நடித்து பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி ஹீரோயினாக இடத்தை தக்கவைத்திருந்தவர் நடிகை ஷோபனா.
இவர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். 53 வயதாகும் ஷோபனா இதுவரை கல்யாணம் செய்யாமல் வாழ்க்கையை வீணடித்துவிட்டார்.

காரணம் கேட்டதற்கு, எனக்கு டைம் இல்லை. நான் ரொம்ப பிசியாக இருப்பதால் கல்யாணம் செய்துக்கொண்டு வாழ்வதற்கு நேரமில்லை என பேட்டி ஒன்றில் கூறினார். ஆனாலும் இவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது குறிப்பிடதக்கது.

அழகு புதுமையான, அமைதியான , பவ்யமான ஹீரோயினாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கௌசல்யா. தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். பெங்களூரில் பிறந்த இவர் பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்தும் திருமணமே எனக்கு வேண்டாம் என கூறி நிராகரித்துவிட்டார். தற்போது இவருக்கு வயது 43 என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் நடிகை சதா. இவர் ஜெயம், எதிரி , அந்நியன், உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நினைத்திருந்தால் டாப் ஹீரோ யாரையேனும் காதலித்து கல்யாணம் செய்திருக்கலாம்.ஆனால் கல்யாணம் செய்தால் சுதந்திரமாக வாழமுடியாது என கூறி திருமணமே செய்துகொள்ளவில்லை. சதாவிற்கு இப்போ வயசு 40 எனபது குறிப்பிடத்தக்கது.

90ஸ் ரசிகர்களின் பேவரைட்ஹீரோயின் ஆன நடிகை கிரண் ரதோட் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர், திருமலை, ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் கவர்ச்சியை வாரி வாரி இறைத்து நடித்து வந்ததால் இதுவரை கல்யாணம் செய்துகொள்ளும் அளவிக்ரு யாரும் முன்வரவில்லை. தற்போது 42 வயதாகும் கிரண் ரதோட் கவர்ச்சி காட்டி தனி ஆப் ஒன்றை வைத்து லட்ச கணக்கில் வருமானம் சம்பாதித்து வருகிறார்.

நடிகை திரிஷா வெயிட்டான மாப்பிள்ளை யாரேனும் பார்த்து கல்யாணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிடலாம் என நினைத்து பிரபல தொழிலதிபர் வருண் என்பவரை நிச்சயம் செய்தார்.

ஆனால், ஜா