திருமணமான 10 வருடத்தில் 25 ஆண்களுடன் ஓடிப்போன மனைவி.. எப்போது வருவார்ன்னு தெரியாது.. இப்போதும் மனைவியை நேசிக்கும் காதல் புருஷன்!

திருமணமான 10 வருடத்தில் 25 ஆண்களுடன் ஓடிப்போன மனைவி.. எப்போது வருவார்ன்னு தெரியாது.. இப்போதும் மனைவியை நேசிக்கும் காதல் புருஷன்!

திருமணந்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமான்னு.. சாமி படத்துல த்ரிஷாவ பார்த்து விக்ரம் பாடுவார்.. அசாமை சேர்ந்த ஒரு பெண் திருகல்யாணம் கட்டிக்கிட்டு 3 பிள்ளை பெற்ற பிறகு இந்தப்பாட்ட பாடிக்கிட்டிருக்கார். பாட்டு தானே சார் பாடிட்டு போறாங்கன்னு நினைக்காதீங்க.. அந்தம்மா இதுவரை 25 பேருக்கு கூட இப்படி டூயட் பாடி தாலிகட்டிய புருஷன், பெற்ற பிள்ளை விட்டு ஓடிபோயிருக்காங்க.

இந்த 10 வருஷத்துல பல முறை வீட்டைவிட்டு வெளியேறி வெவ்வேறு ஆண்களுடன் குடும்பம் நடத்தியுள்ளார். வடிவேலு படத்துல ஒரு காமெடி வரும் நாலு பேரு ஒரு பெண்ணை போலீஸ் ஸ்டேஷன் கூட்டிக்கிட்டு வந்து இவ என் பொண்டாட்டி என் கூட அனுப்பி வைங்கன்னு புகார் கொடுப்பாங்க. வடிவேலு விசாரிச்சுக்கிட்டு இருக்கப்போ கடைசியா ஒருந்தன் வந்து நான் தான் தாலிக்கட்டுன ஒரிஜினல் புருசன்னு சொல்லி கூட்டிக்கிட்டு போவான்.

இதையும் படிங்க அட இதில் இப்படி ஒரு வைத்தியமா தெரிஞ்சா ஒருத்தனும் சிறுநீரக கோளாறால் சாக.மாட்டாங்களே !!!

இந்தக்கதையாக அசாம் சேர்ந்த அந்தப்பெண் வெவ்வேறு ஆண்களுடன் சென்றாலும் சில மாதங்களில் வீடு திரும்பிவிடுவாராம். இந்த முறை வீட்டில் இருந்து 22000 ரூபாயும் வீட்டில் இருந்து கொஞ்சம் பொருள்களை எடுத்து சென்றிருக்கார். இந்த முறை எப்போது வருவார்ன்னு தெரியாது என்கிறார் அவரது அப்பாவி லவ் கணவன். அந்தப்பெண்ணின் முதல் திருமணமும் லவ் திருகல்யாணம் தானாம். இதுவரை 25 ஆண்களுடன் வீட்டைவிட்டு வெளியேறி சென்றவர் சில வாரங்கள் அல்லது சில மாதங்களில் திரும்பி வந்துவிடுவாராம்.

மத்திய அசாமின் திங் லாகர் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு 40 வயதாகிறது. இவரது கணவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர்கள் மிகவும் பின் தங்கிய கிராமத்தில் வசித்து வருகிறார். திருமணமான 11 ஆண்டுகளில் என் மனைவி 25 முறை வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என வேதனையோடு கூறுகிறார் அவரது கணவர். ஒவ்வொரு முறையும் அவள் திரும்பி வரும்போது நான் இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் எனக் கூறுவாள். இதுவரை அவள் தனது வாக்குறுதிகளை காப்பாற்ற வில்லை.

இதையும் படிங்க பெண்களுக்கு ஏன் சொத்து கொடுக்கவேண்டும்…..

உறவினர்கள் வீட்டுக்கு சென்று வருகிறேன் எனக் கூறுவார். சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாத உறவினரை பார்க்க சென்றேன் என்பார். நான் என் மனைவியை உண்மையாக நேசிக்கிறேன். எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காகவே அவர் ஒவ்வொரு முறை திரும்பி வரும்போதும் எந்த தகராறு செய்யாமல் ஏற்றுக்கொள்வேன். நான் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்த குழந்தைகளை யார் கவனித்துக்கொள்வார்கள். தேவையில்லாத பிர்சனைகளை தவிர்ப்பதற்காக நான் போலீசில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்கிறார்.

மூத்த மகளுக்கு 6 வயதாகிறது. இரண்டாவது பையனுக்கு 3 வயது. 3மாத பெண் குழந்தை எங்களுக்கு உள்ளது. செப்டம்பர் 4-ம் தேதி வேலையை முடித்து வீடு திரும்பினேன். என் மனைவி முன்று மாத குழந்தையை பக்கத்துவீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்பதை என் தந்தை மூலம் அறிந்தேன். பக்கத்துவீட்டு பெண்ணிடம் ஆட்டுக்கு புல் பறிக்க செல்வதாக கூறியுள்ளார். வீட்டில் இருந்த 22000 பணம், நகைகளுடன் சென்றுவிட்டார். யாருடன் சென்றாள் என்று கூட தெரியாது. அவள் எப்போது வருவாள் என்று எனக்கு தெரியாது என்கிறார்.

இதற்கிடையில், திங் லாஹர் கிராமத்தை சேர்ந்த உள்ளூர்வாசிகள் அந்தப் பெண் திருமணத்திற்குப் பிறகு அந்தப் பகுதியில் பல ஆண்களுடன் முறையற்ற உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினர்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply