பிரிய நினைத்த கணவர்.. மனைவி எடுத்துள்ள அதிரடி முடிவு :புகுந்த வீட்டுக்கு முன்பு பரபரப்பு!!

திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் செய்து கட்டிய கணவரோடு சேர்த்து வைக்கக்கோரி இளம் பெண் ஒருவர் மாமியார் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டத்-தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி-யுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக் கோட்டை பொ ன்னேரி அரசினர் கலைக் கல்லூரி-யில் ஒன்றாக படித்துவந்த சித்ரா (21) மற்றும் பிரமோத் காதலித்து வந் துள்ளனர்.
இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள காட்டு செல்லியம்மன் கோவிலில் அம்மன் சிலை முன்பு தாலி கட்டி கல்யாணம் செய்து _கொண்டு, சென்னையில் பதிவு கல்யாணமும் செய்து கொண்டனர்.

கல்யாணத்திற்கு பின்பு இருவரும் அவரவர் வீட்டிலேயே வசித்தனர். அதன்பின் இரு வீட்டாருக்கும் கல்யாணம் விஷயம் தெரிய வந்து பிரச்சனை ஏற்படவே, இருவரும் பின்னர் சென்னை மாதவரம் மாத்தூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர்.
மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த சித்ரா மற்றும் பிரமோத்தின் கல்யாண வாழ்க்கையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதனையடுத்து பிரமோத் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவியை பிரிந்து வாழ விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆனால் சித்ரா தன் கணவருடன் தான் வாழவேண்டும் என தனது உறவினர்களுடன் வந்து ஊத்துக்கோட்டையில் உள்ள மாமியார் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.