யானை குட்டியை பெற்றெடுக்கும் காண கிடைக்காத வீடியோ காட்சி

யானை குட்டியை பெற்றெடுக்கும் காண கிடைக்காத வீடியோ காட்சி

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

காடுகளில் பொதுவாக நாம் பலவகையான மிருகங்களை கண்டிருந்தோம் அல்லது சொல்லி அறிந்திருந்தோம் . நமது சிறு வயதில் பல கதைகளை கேட்டிருந்தோம் அப்ப கதைகளில் காட்டின் ராஜாவாக சிங்கம் தான் பலமான மிருகம் என்று நமக்கு சொல்லி இருப்பார்கள் அல்லது அறிந்திருந்தோம் ஆனால் காட்டில் வாழும் மிருகங்களில் மிகவும் பலமான மிருகம் ஆனை தான். இவை பல ஆண்டுகள் உயிர்வாழும் விலங்காகும்.

நமது வீடுகளில் நாம் பல செல்லப்பிராணிகளை வளர்ந்து வந்திருந்தோம் . நாம் நாய் பூனை குரங்கு இது போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பது கேள்வி பட்டிருந்தோம் . ஆனால் வெளிநாடுகளில் செல்லப்பிராணியாக ஆனையை வளர்க்கும் பழக்கமும் இருந்து தான் வருகிறது. நம் நாட்டில் அதற்குரிய அனுமதி இல்லை அவ்வாறு அனுமதி இல்லாத போதும் மிருகக்காட்சி சாலைகளில் பொதுவாக ஆனைகளை வளர்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இப்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் ஆனை குட்டியை ஈன்று எடுக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி அனைவரையும் வாயின் மேல் கையை வைக்கும் அளவுக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பிட்ட வீடியோவில் ஒரு பெண் ஆனை பல மணி நேரமாக குட்டியினை ஈன்று எடுப்பதற்காக பல மணி நேரம் முயற்சி செய்து கொண்டு காத்திருக்கிறது இதனை சுற்றி மிருகக்காட்சி சாலை பராமரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் சில மணி நேரம் கழித்து அந்தப் பெண் ஆனை தனது குட்டியை ஈன்றெடுக்கிறது .

அப்புறம் சில நிமிடங்கள் கழித்து அங்கே பராமரிப்புக்காக காத்திருக்கும் ஒரு நபர் சென்று அந்த குட்டியை துடைத்து விடுகிறார் சில நிமிடங்களில் அந்த குட்டி ஆனை எழுந்து நடக்கச் முயற்சிக்கிறது இதைப் பார்த்த அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply