மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது – பிரியங்கா காந்தி குற்றசாட்டு

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆக்ஸிஜன் அதிக அளவில் தயாரிக்கும் செய்யும் நாடுகளில் பாரதமும் ஒன்றாக இருக்கும் போது எப்படி பற்றாக்குறை வருகிறது? முதல் மற்றும் 2ம் அலை கொரோனாவுக்கு இடையே 8 முதல் 9 மாதங்கள் இருந்தன. மத்திய அரசின் சொந்த ஆய்வும் 2வது அலை உடனடியாக பரவும் என்று சுட்டிக்காட்டியது. ஆனாலும் மத்திய அரசு அதனை புறக்கணித்தது.
தற்போது பாரதம்வில் 2 ஆயிரம் லாரிகள் மூலமாக மட்டுமே ஆக்சிஜனைக் கொண்டு செல்ல முடியும். தேவைப்படும் இடங்களுக்கு ஆக்ஸிஜன் சென்று அடையவில்லை.
கடந்த 6 மாதங்களில் 1.1 மில்லியன் ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் இன்று நாம் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அரசு 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது.
அந்த நேரத்தில் 3 முதல் 4 கோடி இந்தியர்-களுக்கே தடுப்பூசி போடப்பட்டது. இந்தியர்-களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கவில்லை? மோசமான திட்டமிடல் காரணமாக தடுப்பூசி பற்றாக்குறை, திட்டமிடல் இல்லாததால் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, சரியான வியூகம் இல்லாததால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது. இது மத்திய அரசாங்கத்தின் தோல்வியை குறிக்கிறது என்றார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.